நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுக்காஆலத்தூர் நாடு ஊராட்சியில் உள்ள புதுவளவு பட்டி கிராமத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையாக பொதுமக்கள் புதிய தார்சாலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் .இதைத்தொடர்ந்து இன்று ஆலத்தூர் புது வளவு பட்டிக்கு புதிய தார்சாலைபணி இன்று பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய கழக செயலாளர் எஸ். செந்தில் முருகன் மற்றும் ஆலத்தூர் நாடுஊராட்சி மன்ற தலைவர் மற்றும்துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள்,கிளைச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட ஊர் பொதுமக்கள் பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.