இராசிபுரம்;ஆக,9-மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மங்களபுரம் கிராமத்தில் 09.08.2023 புதன் கிழமை அன்று காலை 9 மணி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற்றது. மங்களபுரம் காவல் நிலையம் அருகில் உள்ள வார சந்தை வளாகத்தில் இந்த முகாம் நடைபெற்றது . இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா, மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், திமுக நாமகிரிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே பி ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில்பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா,நலவாரிய அட்டை, பட்டாமாறுதல், உட்பிரிவு செய்து தனிப்பட்டா, குடிநீர்வசதி, சாலை வசதி,மருத்துவ காப்பிட்டு அட்டை மருத்துவ முகாம் போன்ற பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர்.