சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர்..
நோய் ஏற்படும் அபாயம்..

இராசிபுரம்;ஜீன்,12-

சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர் காரணமாக
நோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட திம்மநாயக்கன் பட்டியை அடுத்து மத்துரூட்டு பஞ்சாயத்து உள்ளது. இந்த பகுதியில் உள்ள சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை இவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
இந்த நிலையில் ஊருக்கு கிழக்கே உள்ள தெருக்களில் சாக்கடை கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.இதன் காரணமாக இந்த பகுதியில் தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளதோடு,தூற்நாற்றம் வீசுகிறது. எனவே அரசு தலையிட்டு இப்பிரச்சினை தீர்க்க வேண்டும் என்றுபொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *