இராசிபுரம்;ஆக,16-

நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாவல் பட்டி பஞ்சாயத்து உள்ளது. நாடு முழுவதும் 78 வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.அதனை தொடர்ந்து நாவல் பட்டி பஞ்சாயத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் நாவல் பட்டி ஊராட்சி தலைவர் கி.புருஷோத்தமன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணை தலைவர் லட்சுமி மற்றும்ஊராட்சி செயலாளர் பி.செங்குட்டுவேலன்,வார்டு உறுப்பினர்கள் மு.சங்கீதா, நவீன், கண்ணன்,வேம்பாயி, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து உடையார்பாளையம் அரசு பள்ளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை பஞ்சாயத்து தலைவர் புருஷோத்தமன் தொடங்கி வைத்தார்.இதில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *