வில்வித்தை போட்டியில் பதக்கம் பெற்ற
மாணவர்களுக்கு நாமக்கல் MLA பாராட்டு
மாநில வில்வித்தைப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA பாராட்டினார். கொரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நாமக்கல் MLA ராமலிங்கம், தான் படித்த புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று பள்ளிக்கு மாணவ, மாணவியர் வருகை மற்றும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பள்ளியை மேம்படுத்துவது குறித்து அவர் தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னையில் நடந்த, 14வது மாநில அளவிலான வில்வித்தை போட்டியில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, 21 பதக்கங்களை வென்றுள்ளனர். அவர்களில் கவியரசி, ஜானியா, சாதனா ஆகியோர் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA பாராட்டு தெரிவித்தார். வில்வித்தை பயிற்சியாளர் ரஞ்சித்குமார், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய, தி.மு.க., பொறுப்பாளர் கவுதம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
கல்வி
சிறப்பு தொகுப்புகள்
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்
விளையாட்டு