பள்ளிபாளையத்தில் மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நவம்பர் 8 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
அடுத்த மூன்று தினங்களுக்கு தொடர்மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்கள் இன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு, காவிரி கரையோரம் உள்ள ஜனதா நகர், மீனவர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து மழை வெள்ள பாதிப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணையில் அதிக அளவில் நிரம்பி வருவதால் காவிரி ஆற்றில் அதிக அளவு நீர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஒருவேளை மேட்டூர் அணை திறக்கப்பட்டு நீர் அதிகரித்தால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குசெல்லவும் அறிவுறுத்தினார். பாதிக்கபடும் மக்களுக்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தேவையான ஏற்பாடுகளையும் செய்து தருமென அங்கிருந்த பொதுமக்களிடம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்கள் உறுதியளித்தார். மேலும் மழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *