துறையூர் அருகே தம்மம்பட்டி சாலையில் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சமீபத்தில் வந்த பஸ் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நினைத்த டிரைவர் சாலை ஓரம் செல்ல முயலும் போது எதிர்பாராத வகையில் மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஸ் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் டிரைவர் உள்பட 15 பயணிகள் காயமடைந்தனர். துறையூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *