பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாத 8 பஸ்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி

கடலூர்:கடலூர் மஞ்சகு ப்பத்தில் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் உள்ளது.இந்த பஸ் நிறுத்தம் வழியாக கடலூரில் இருந்து பண்ருட்டி, விழுப்புரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் 50 லட்சம் மதிப்பீட்டில் பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.இந்நிலையில் தினந்தோறும் இவ்வழியாக செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றாமல், சாலையில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிறுத்தத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் நிற்காமல் வெளியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் ஒரு அரசு பஸ், புதுச்சேரி அரசு பஸ் உள்பட 8 அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதித்து டிரைவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பஸ் நிறுத்தத்திற்குள் பஸ்கள் செல்லாமல் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *