ஏப்ரல் 5
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் எலந்தகுட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னார் பாளையம் கிராமத்தில் ஏராளமான விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றன.. நேற்று காலை சின்னார்பாளையம் கிராம பகுதிக்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு புதிதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அமைக்கப்பட உள்ளதால் அரசு பொறம்போக்கு இடத்தில் குடியிருப்பவர்கள் உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும் என அங்கிருந்தவர்களிடம் கூறினர். இதனையடுத்து அங்கிருந்த விவசாயிகள் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து நிலத்தை அரசுக்கு சொந்தமான நிலம் என்று வருவாய்த்துறை கேட்பது பொருத்தமானது அல்ல எனக் கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. இந்நிலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு அரசு இடம் என கூறப்படும் விவசாய நிலத்தை வருவாய்த் துறையினர் மீட்டனர் ..இதனை தடுக்க சென்ற ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மற்றும் புதிய திராவிட கழக நிர்வாகிகள் காடையார் சரவணன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்த பள்ளிபாளையம் போலீசார் பள்ளிபாளையத்தில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.. பிறகு மாலையில் விடுதலை செய்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கேட்டபொழுது வருவாய்த்துறையின் செயலை கண்டித்து அடுத்த கட்ட போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர் வருவாய் துறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பள்ளிபாளையம் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.