நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உழவன் செயலி குறித்து செயல் விளக்கம் நடை பெற்றது இதில் அரசு மானியங்கள், பயிர் காப்பீடு, அரசு திட்டங்கள், வேளாண் அலுவலர் வருகை நேரம், உரம் மற்றும் விதை இருப்பு, அட்மா திட்டங்கள், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு முறை, பட்டு வளர்ப்பு முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் உழவன் செயலி பதிவிறக்கம், பதிவு செய்தல் மற்றும் உழவன் செயலியின் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியை உதவி வேளாண் இயக்குநர் ராதாமணி மற்றும் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் அவர்களின் உதவியுடன் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் ஏற்பாடு செய்து நன்றி கூறினர்