பள்ளிபாளையம் ஏப்ரல் 19
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் போஷன் அபியான் ஊட்டச்சத்து திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கும் அவருடைய பெற்றோர்களுக்கும் மத்திய அரசின் போஷன் அபியான் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியானது நாமக்கல் மாவட்டம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட் உட்பட்ட கண்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிபாளையம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.. இந்த நிகழ்விற்கு மருத்துவப் பிரிவு மாநில செயலாளர் டாக்டர் பிரேம் குமார் அறிவுறுத்தலின்படி, மருத்துவப் பிரிவு நாமக்கல் மாவட்டத் தலைவர் டாக்டர் ஷாம் சுந்தர் அவர்களின் வழிகாட்டுதல்படி, மருத்துவப் பிரிவு நாமக்கல் மாவட்ட தினேஷ்குமார் தலைமையில் போஷான் அபியான் திட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச் சத்தை அதிகரிக்கும் வகையில் பிஸ்கட், பழங்கள் வழங்கப்பட்டன.. மேலும் இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் நாகராஜ்,
பள்ளிபாளையம் நகர தலைவர், அரசு தொடர்புப் பிரிவு,AGE பாலாஜி ஈஸ்வரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.. 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன.