காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அசிந்த ஷியுலிக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவை பெருமையடைய வைத்து மூவர்ணக் கொடியை உயரே பறக்க வைத்துள்ளீர்கள் என்று குடியரசு தலைவர் முர்மு கூறியுள்ளார். சிறப்பு வாய்ந்த தருணத்திற்காக அசிந்தா கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.