புதுடில்லி-”மக்கள் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும், ‘5ஜி’ தொழில்நுட்ப சேவை இன்னும் ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வந்து விடும்,” என, மத்திய தொலைதொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவுஹார் தெரிவித்தார்.
புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட அதிநவீன தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக, நம் நாட்டில் இன்று வலுவான 5ஜி மொபைல் தகவல் தொடர்பு சூழல் அமைப்பு உள்ளது.
அதேபோல, 5ஜி தொழில்நுட்பத்தில் தங்கள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகளை பல்வேறு நிறுவனங்களும் அறிந்து கொள்வதற்கான, 5ஜி பரிசோதனை உபகரணங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 5ஜி சேவை இன்னும் ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வந்து விடும்….