பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு
பி.எம் கிசான் திட்ட நிதியினை தொடந்து பெற ஆலோசனைநாமக்கல் மாவட்டம்., பரமத்தி வட்டார விவசாயிகளுக்கான “பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டம்“ தொடந்து விசாயிகள் பெற வேண்டி வேளாண்மை - உழவர் நலத்துறையின் வேளாண்மை உதவி இயக்குநர், திரு.செ.கோவிந்தசாமி, அவர்கள் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பி.எம்-கிசான் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பரமத்தி வட்டார விவசாயிகள் இதுவரை பெற்று வந்த பாரத பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் தொடர்ந்து பெற வேண்டிய விவசாய பெருமக்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண் விபரங்களை அருகில் உள்ள பொது சேவை மையத்தில் பி.எம்-கிசான் இணையதளத்தில் இ.கே.ஒய்.சி (e.KYC) ல் ஆதாருடன், கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போது, கைப்பேசிக்கு வரும் கடவு எண்ணைப் (பாஸ்வோ்டு) பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை பதிவு செய்து கொண்டால், விவசாயிகளுக்கு இந்த திட்டம் மூலம் வழங்கப்படும் தவணை தொகை அவா்கள் வங்கிக் கணக்கில் தொடந்து வரவு வைக்கப்படும் என அவர் அந்த செய்தி குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேளாண்மை உதவி இயக்குநர்,
பரமத்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *