இராசிபுரம்;ஆக…1-நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன்கோவிலில் ஆடி மாதம் பெளர்ணமிமுன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வர மூர்த்தி பாளையம் உள்ளது.இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஆடி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு பல ஆலையங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.தொடர்ந்து ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.மேலும் 110 கலையம் மற்றும் 200 மேற்பட்ட கூழ் கலையம் வைத்து பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் தர்மகர்த்தா சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் தலைமை வகித்தார்.தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இந்த விழாவில்இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆன்மீக அன்பர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.