இராசிபுரம்;ஜீலை,28-
நெய்வேலி நிலக்கரி கழகமான,
என் எல்சி நிறுவனம்
கடலுார் மாவட்டத்தில் நிலம் எடுப்பு என்ற பெயரில்,தன் இரண்டாம் சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை கேட்காமல், மறுவாழ்வு திட்டங்களை நிறைவேற்றாமல், நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் என்.எல்.சி., நிறுவனத்தின் இந்த அராஜக போக்கை கண்டித்து
பாமாக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து காவல் துறையினர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமாக தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் பாமக சார்பில் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனை அடுத்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் பாமக கட்சியின் சார்பில் மங்களபுரம் பேருந்து நிறுத்தம் அருகேகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.முருகேசன் தலைமை வகித்தார்.தொடர்ந்து முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜி.திருப்பதி,ஒன்றிய செயலாளர்கள் கோலிஸ் பெரியசாமி,எஸ் நாகராஜன், வரதராஜன் , ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தொண்டர்கள் பொதுமக்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *