நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக கொல்லிமலை வழங்குகிறது…

இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்…

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் செம்மேடு வியூ பாயிண்ட் அருகில் கரடி ஒன்று உணவு தேடிக் கொண்டிருந்த வீடியோ வைரலானது…

இந்நிலையில் செம்மேடு அருகே உள்ள காரியங்காடு பகுதியில் காலை 6 மணிக்கு காளி (60) மற்றும் பழனிச்சாமி(50) ஆகிய இருவரும் விவசாய வேலைக்கு சென்றுள்ளனர்…

அப்போது அங்கு மறைந்திருந்த கரடி விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த நிலையில் பலத்த காயங்களுடன் தற்போது அவர்கள் கொல்லிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்…..

செம்மேட்டில் இருந்து முக்கிய சுற்றுலா தளமான தாவரவியல் பூங்கா ,படகு இல்லம் செல்லக்கூடிய வழியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *