![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2023/07/IMG-20230725-WA0063.jpg)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில்
9,551 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், 3 பள்ளிகளை சேர்ந்த 372 மாணவ, மாணவியர்களுக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மிதி வண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசுவாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.