இராசிபுரம்;ஜுலை,22-
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள பத்ரகாளி அம்மன்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு வளைகாப்பு விழா நடைபெற்றது.
இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வர மூர்த்தி பாளையம் உள்ளது.இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல ஆலையங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.தொடர்ந்து ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் உள்ள ஸ்ரீ வரம் தரும் பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டவளையல்கள் கொண்டு வளைகாப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் தர்மகர்த்தா சிவஸ்ரீ வெங்கட்ராஜ் சுவாமிகள் தலைமை வகித்தார்.தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இப்பகுதியில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் அணிவித்து வளைகாப்பு விழா நடைபெற்றது.தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆன்மீக அன்பர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2023/07/IMG-20230721-WA0119.jpg)