நாமக்கல்;பிப்,5_
நாமக்கல்லில் லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
லேப் டெக்னீசியன் தினத்தை முன்னிட்டு பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கம் சார்பாக இரண்டாவது ஆண்டாக எல் .டி. பி. எல் கிரிக்கெட் போட்டி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகிறது.
அதனை தொடர்ந்து நேற்று நாமக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அணியின் கேப்டன் கோபி முன்னிலை வகித்தார். இந்த கிரிக்கெட் போட்டியில் முதலில்
பேட் செய்த கரூர் அணியினர் 15 ஓவர்களில் 62 ரன் எடுத்தனர்.இரண்டாவதாக களம் இறங்கிய நாமக்கல் அணியினர் 11 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் லேப் டெக்னீசியன் சங்கத்தின் அகில இந்திய தேசிய தலைவர் காளிதாசன், மாநில தலைவர் துரைசாமி, ஈரோடு மற்றும் கோவை மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்..
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
உலகம்
சிறப்பு தொகுப்புகள்
சேலம் செய்திகள்
தமிழகம்
தொண்டு நிறுவனங்கள்
நாமக்கல் செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
மருத்துவம்
முகப்பு பக்கம்
விளையாட்டு