இராசிபுரம்;பிப்,8-

சிங்கிலியன் கோம்பை அரசு பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட திம்ம நாயக்கன்பட்டி அடுத்து சிங்கிலியன் கோம்பை உள்ளது .இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த பள்ளியில் இன்று வியாழக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் வள்ளி தலைமை ஆசிரியர் க. ரகுநாத் தலைமை வகித்தார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஏ. முருகேசன் முன்னிலை வகித்தார்.மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஏ.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கெளதமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து பள்ளி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *