இராசிபுரம்;மார்ச்,30_
மங்களபுரம் பகுதியில்வேகத்தடை அமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.
மங்களபுரத்திலிருந்து உரம்பு செல்லும் சாலையில் கல்லேரிப்பட்டி தாண்டகவுண்டம் புதூர் ,அத்திமரத்து குட்டை உள்ளிட்ட கிராமப் பகுதிகள் உள்ளது. இந்த சாலை வழியாக ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் பள்ளி வாகனங்களும் சென்று வருகிறது. இதனை அடுத்து இங்குள்ள கல்லேரிபட்டி தாண்டாகவுண்டம் புதூர் வளைவில் வேகத்தடை இல்லாமல் உள்ளது.இதன் காரணமாகஎதிரே வரும் வாகனங்கள் வளைவில் தெரியாமல் உள்ளதால் சில சமயங்களில் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே இந்த வளைவில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைத்து தர வேண்டும் என இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.