பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம்- கரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கம்..
கொரோனா பரவல் காரணமாக சேலம் – கரூர் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக இன்று (15-11-2021) திங்கட்கிழமை முதல் மீண்டும் இயங்கியது.
சேலத்தில் இருந்து இன்று காலை 6.40 மணியளவில் புறப்பட்ட ரயில் நாமக்கல்லிற்க்கு சரியாக காலை 7.37 வந்தது… குறைந்த அளவே பயணிகள் இருந்தனர்..
(3 பயணிகள் மட்டுமே நாமக்கல் வந்தனர்..)
நாமக்கல்லில் இருந்து கரூர் யாரும் செல்லவில்லை…
இந்த டெமு சிறப்பு ரயில் சேலத்தில் இருந்து காலை 06.40 மணிக்கு புறப்பட்டு, காலை
08.20 மணிக்கு கரூர் ரயில் நிலையம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (06838) கரூரில் இருந்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.35மணிக்கு, சேலம் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில்கள் சேலம், மல்லூர், ராசிபுரம், களங்காணி, நாமக்கல், மோகனூர், கரூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இந்த டெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இயங்காது.
இது சிறப்பு ரயிலாக இயக்கப்படுவதால், பயணிகள் ரயில் கட்டணத்திற்கு பதிலாக எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்றரை ஆண்டுக்கு பின்பு முன்பதிவில்லாத ரயில் இயக்குவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.