மேட்டுப்பாளையத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் பெயரில் பூங்கா அமைக்க கோரிக்கை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டேரி நஞ்சப்பா சத்திரம் அருகே கடந்த 8ஆம் தேதி முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 11 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர் அவர்களின் பெயரில் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பில்லாமல் உள்ள பூங்காக்களை
மேட்டுப்பாளையத்தில் உள்ள தன்னார்வ சமூக சேவை அமைப்புகளிடம் பேசி அவர்களின் பராமரிப்பில் ஒப்படைத்து அதற்கு
உயிரிழந்த ராணுவ வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் இதனால் மேட்டுப்பாளையத்தில் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ள பல பூங்காக்கள் பொதுமக்கள் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு வரும் ஆகவே இதற்குத் தேவையான நடவடிக்கையை கோவை மாவட்ட நிர்வாகமும் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகமும் எடுக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்