பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மக்களுக்கான இளைஞர்கள் மக்களுக்கான மாணவர்கள் அமைப்பின் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய மாநில அரசு பந்த் நடத்த வேண்டும் என்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்றும் இஸ்லாமியர் உள்பட 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பள்ளிகள் மீதும் கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகர பொருளாளர் சீனிவாசன் தலைமையில் இன்று பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. ஆர்ப்பாட்டத்தில் இடது தொழிற்சங்க மைய மாவட்ட செயலாளர் புகழேந்தி அவர்களும் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ கோவிந்தராஜ் அவர்களும் உரையாற்றினார்கள்