ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.: அமைச்சர் மூர்த்தி
ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். மதுரை மாவட்டம் வீரபாண்டியில் கால்நடை முகாமை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் மூர்த்தி இதனை தெரிவித்துள்ளார். மேலும் கலப்பின மாடுகளுக்கு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.