அம்மா உணவக விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பி.எஸ்
அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறினார். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.