இராசிபுரம் பகுதியில்தொடர்ந்து 100 நாள் உணவு வழங்கி வரும் தொண்டு நிறுவனங்கள்….
இராசிபுரம்: ஜூலை_20
சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் விடியலை நோக்கி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை சார்பில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட தாண்டாகவுண்டம் பாளையத்தில் வழங்கும் 25முதியோர் கான தொடர்ந்து உணவு வழங்கும் சேவையில் இன்று 100 நாள்..
இதில் கலந்து கொண்ட மங்களபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி கெளசல்யா முருகப்பன் மற்றும் வார்டு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஊராட்சி சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினர்.தொடர்ந்து இவ்விழாவில் விடியலை நோக்கி அறக்கட்டளை தலைவர் திரு மா.வீரமணிகண்டன், ஸ்ரீ அருள் முருகன் அறக்கட்டளை தலைவர் திரு.msஅருள், துணை தலைவர் திரு.பிரபு மற்றும் அறக்கட்டளை பணியாளர்கள் திருமதி.சாந்தி சாமுவேல், மற்றும் திருமதி.அம்மணி கருப்பண்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.