குடியிருப்பு பகுதியில் புகுந்த எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு உயிருடன் பிடிபட்டது.
டிசம்பர் 28
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி
பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை குமரன் நகர் எலந்தகுட்டை அஞ்சல் என்ற பகுதி அருகே குடியிருப்பு பகுதி ஒன்றில் பயன்படுத்தப்படாத கழிவறை தொட்டியில் சுமார் எட்டடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு பதுங்கி இருப்பதாக வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் பா.சிவக்குமார் அவர்களுக்கு தகவல் வரவே, அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் லாவகமாக அந்தப் பாம்பினை பிடித்து பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.