பள்ளிபாளையம் நகராட்சி வார்டுகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
டிசம்பர் 28
![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2021/12/IMG-20211228-WA0046-1024x768.jpg)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி
கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் நேற்று புகைபோக்கி மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் தேங்காமல் இருந்தால் கொசு உற்பத்திக்கு வாய்பில்லை எனவும் பள்ளிபாளையம் நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் நகராட்சி ஊழியர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.