தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் கட்டுப்பாடுகள் நீட்டிப்பது குறித்து முதல்வர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். நாளை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கட்டுப்பாடுகளுடன் நடத்துவது குறித்தும் நாளை ஆலோசிக்கப்பட உள்ளது.