இராசிபுரம்,அக்:10-
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது..
இங்கு சுமார் 1000 த்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்..
இந்நிலையில் இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.. இந்நிலையில் இப்பள்ளி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.தற்போது காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளி திறக்கப்பட உள்ளது.தொடர்ந்து கடந்த வாரம் பெய்த மழையால் மலைப்பகுதியில் இருந்து அட்டை பூச்சிகள் பள்ளி வகுப்பறை,கழிவரை, சமயலறை, மற்றும் பள்ளி வளாகம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் கூட்டமாக உள்ளது.மேலும் அருகில் உள்ள வீடுகளிலும் உள்ளது.
இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறியதாவது.
கடந்த 5 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் அட்டை பூச்சிகள் அதிக அளவில் தொல்லை கொடுத்து வருகிறது.முதலில் பள்ளி வளாகத்தில் இருந்த அட்டை பூச்சிகள் தற்போது எங்கள் வீட்டிற்கு வந்து விட்டது. மருத்து தெளித்தாலும் மீண்டும் மீண்டும் கூட்டம் கூட்டமாக வருகிறது.நாளை பள்ளி திறக்கும் நிலையில் அரசு தலையிட்டு மாணவ மாணவிகள் நலன் கருதி அட்டை பூச்சிகளை அகற்ற வேண்டும் என்றனர்.
எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று
கல்வி
சிறப்பு தொகுப்புகள்
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
நிகழ்வுகள்
பள்ளிக்கல்வித்துறை
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்