இராசிபுரம்:நவ,2_

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் மங்களபுரம் பஞ்சாயத்தில் செயல்படும் சந்தோஷ் லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்தை இனி தொடர்ந்து நடைபெறாமல் இருக்க முதன்மை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் செயல்படும் சந்தோஷ் லிமிடெட் கம்பெனி மூலம் ஏற்படும் காற்று மற்றும் குடிநீர், மண் வளம் மாசுபாடு குறித்து தங்கள் கருத்துக்களை கூறினர்.மேலும் இதில் மாணவி உஷா குமார் பேசும் போது எங்களுக்கு அரசு தரப்பில் இருந்து கொடுக்கும் இலவச சைக்கிள் மற்றும் மதிய உணவு தேவை இல்லை எங்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் காற்று தான் தேவை என பேசினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *