கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது. ஒவ்வொரு லாரியும் ஒரு சிற்றூரை மூடும் அளவுக்கு பெரிய சைசில் உள்ளது. கடந்த 4 நாட்களாக பல லட்சக்கணக்கான ரூபாய் மண்ணை ~அள்ளி~ திருடி உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஹைவேஸ் டிபார்ட்மெண்டுக்காக மண் எடுத்து இருந்தாலும் இது முறையான அனுமதி பெற்று எடுக்கவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி லாரியில் இருந்த மண்ணை திருடிய இடத்திலேயே வழக்கை வலுவிழக்கச் செய்யும் வகையில் கொட்டி விட்டு வந்து காவல் நிலையத்தில் லாரிகளை நிறுத்தி உள்ளனர்.
cm நேர்மையான ஆட்சி நடத்த முனைப்போடு இருப்பினும் சில கொளுத்தவர்கள் ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க கங்கணம் கட்டிக்கொண்டுள்ளனர்.
இந்த லாரியின் உரிமையாளர் மற்றும் காண்டிராக்டர் மீது உரிய விசாரணை நடத்தி குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்….
![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2022/10/IMG-20221006-WA0013-582x1024.jpg)