இராசிபுரம்;ஜன,8-
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
நாமக்கல் கிழக்குமாவட்ட விவசாய அணி தலைவராக கே.காளியப்பன் பணியாற்றி வருகிறார்.
இவர் மீது நேற்று செல்போன் வாயிலாக மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். இந்நிலையில் காளியப்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜக காளியப்பனுக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக்கோரி ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதில் பிஜேபி நாமக்கல் கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் எஸ்.காளியப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் க.அசோக்குமார், ஒன்றிய தலைவர் கே.செல்வகுமார், மாவட்ட திட்ட பொறுப்பாளர் எஸ்.அருள்பிரகாஷ், இராசிபுரம் ஒன்றிய தலைவர் எஸ்.பாரதி, ஒன்றிய மகளிர் அணி துணை தலைவர் எஸ்.சாந்தி, ஒன்றிய செயலாளர் பூபதி, ஒன்றிய பொதுச்செயலாளர் எம்.பிரகாசம் ஆகியோர் உட்பட கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
bjp
அரசியல்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
சிறப்பு தொகுப்புகள்
சேலம் செய்திகள்
தமிழகம்
தொண்டு நிறுவனங்கள்
நாமக்கல் செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்