நாமக்கல் நகர பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.
நாமக்கல் நகர பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர பாஜக தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பட்டியல் அணி தலைவர் ராம்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அம்பேத்காரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.