பள்ளிப்பாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது

டிசம்பர் 6

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்,
மக்கள் ஒற்றுமையை பேணிக்காப்போம் ,
மதவெறி சக்திகளை தனிமைப்படுத்துவோம் என்ற உறுதிமொழியோடு
புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சி பள்ளிபாளையம் ஆவரங்காடு சிஐடியு சங்க அலுவலகத்தில் காலை 10 மணி க்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெற்றது. இதில் மாவட்ட உதவிச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
நாமக்கல் மாவட்ட உதவி தலைவர் எம். அசோகன் மாவட்ட குழு உறுப்பினர் ஆர் .ரவி மற்றும் அனைத்து வர்க்க வெகுஜன அமைப்பின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *