பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் ரயில்வே தண்டவாளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு. போலீஸார் விசாரணை
டிசம்பர் 11
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்காவிரி ஆர்.எஸ். ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைக்கவே, பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு ரயில்வே துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.. ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி பெயர் சிவகாமி 72-வயது அன்னை சத்யா நகர் பகுதியில் வசிப்பவர் என்பதும் தெரியவந்தது.. இரவு நேரத்தில் சாலையை கடக்க தண்டவாளத்தை கடக்க முயலும் போது எதிர்பாராத விதமாக அடிபட்டு இறந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.