வேகத்தடை களுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்திடுக மநீம மனு
குமாரபாளையம் நகரம் மக்கள் நீதி மய்யம் மகளீர் அணி சார்பாக குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் . சசிகலா அவர்களிடம் குமாரபாளையம் நகரில் உள்ள பல வேகத்தடைகளை அடையாளம் காண ஏதுவாக வெள்ளை பெயின்டு அடிக்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட துணை செயலாளர் சிவகுமார், மாவட்ட பொருளாளர் நந்தகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சூரியா கோபாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்ராஜ் மாவட்ட ஆலோசகர் கைதறி மூர்த்தி ஆகியோரது ஆலோசனை படி நகர மகளீர் அணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், 22-வது செயலாளர் ரேவதி, 9-வது நிர்வாகி ஜெயந்தி மற்றும் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்