Category: நிகழ்வுகள்

*வாழ்க்கையில் ஒன்று சேரமுடியவில்லை… திருமணமான இளம்பெண் முன்னாள் காதலனுடன் தற்கொலை*

சிக்பள்ளாப்பூர்,
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா தொட்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா (வயது 19). அதே கிராமத்தை சேர்ந்தவர் வேணு (21). இவர்கள் 2 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இவர்களின் காதல் விவகாரம் அனுஷாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அனுஷா, வேணுவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அனுஷாவை வேறுவொரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆடி மாதத்தையொட்டி அனுஷா பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது காதலனை சந்தித்த அனுஷா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதை காதலனிடம் கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து 2 பேரும் தொட்டபள்ளி கிராமத்தில் உள்ள குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதை பார்த்த கிராம மக்கள் கெஞ்சர்லஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்க்கையில் 2 பேரும் சேர முடியவில்லை என்பதால், ஒன்றாக குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கெஞ்சர்லஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

400 கி.மீ. பயணித்து ரத்த தானம்: இளம்பெண் உயிரை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு

400 கி.மீ. பயணித்து ரத்த தானம்: இளம்பெண் உயிரை காப்பாற்றிய நபருக்கு குவியும் பாராட்டு இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில்…

திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது

திருப்பூரில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 3 வது மண்டலம் நல்லூர் பகுதியிலுள்ள (ஆர்.ஐ.) வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மைதிலி…

துறையூர் ஆத்தூர் சாலையில் சத்ய நாராயண சிட்டி அருகே கிருஷ்ணா பேருந்து விபத்து.

துறையூர் அருகே தம்மம்பட்டி சாலையில் பாலாஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சமீபத்தில் வந்த பஸ் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நினைத்த…

பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாத 8 பஸ்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி

பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாத 8 பஸ்களுக்கு அபராதம்- போக்குவரத்து போலீசார் அதிரடி கடலூர்:கடலூர் மஞ்சகு ப்பத்தில் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் உள்ளது.இந்த பஸ் நிறுத்தம்…

அமெரிக்காவில் சோகம்: கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி

அமெரிக்காவில் சோகம்: கார் விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்த 5 இந்திய மாணவர்கள் சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை…

அரியானாவில் சோகம்: சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்து 8 பேர் பலி

அரியானாவில் சோகம்: சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்து 8 பேர் பலி சண்டிகர்:அரியானா மாநிலம் நு நகரில் இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து…

மது போதையில் அட்டகாசம்: தாய்-தந்தையுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

மது போதையில் அட்டகாசம்: தாய்-தந்தையுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி திருப்பூர்,கணவனை தாய்- தந்தையுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டியை சேர்ந்த…

சென்னையில் வீடு கட்ட ரூ. 40 லட்சம் கடன்… திருப்பி கேட்டு தொந்தரவு… மகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை

சென்னை,சென்னை மணலியில் சிறுதானிய வியாபார கடை நடத்தி வருபவர் ஜெகநாதன் (வயது 40). இவரது மனைவி லோகேஸ்வரி (வயது 35). இந்த தம்பதிக்கு காவியா (வயது 13)…

பிளஸ்-1 தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி- மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை

பிளஸ்-1 தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் 95.23 சதவீதம் பேர் தேர்ச்சி- மாநில அளவில் 3-வது இடம் பிடித்து சாதனை திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை ஆண்கள் பள்ளியை…