இராசிபுரம்;பிப்,8_நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.இங்கு உள்ள நாரைக்கிணறு பகுதியில் நடராஜ் (வயது 55)என்பவர் விவசாய நிலத்தில்குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருக்கு ஒரு மனைவி 5 குழந்தைகள் உள்ளனர்.தொடர்ந்து அருகில் உள்ள இவரது உறவினர்களுக்கும், இவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.கடந்த பொங்கல் பண்டிகையின் தமிழர் திருநாளில் பொழுது இவரின் உறவினர்கள் சுரேஷ், ரமேஷ், அருள் குமார், அவர்களது தாயார் கண்ணம்மாள் மற்றும் அவர்களின் நண்பர்கள் மாரி, மாதேஷ் ஆகியோர் மேற்கொண்ட விவசாயி நடராஜை கொல்லும் நோக்கத்தில்கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.இரண்டு கால்களும் வெட்டப்பட்ட நிலையில் அருகில் உள்ளோர் நடராஜ் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக ஆயில் பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக காரைக்கால் சென்று அங்கிருந்து கோவை தப்பி சென்ற சுரேஷ் என்பவரை ஆயில் பட்டி காவல் உதவி ஆய்வாளர் கங்காதரன் தலைமையில் கொண்ட குழு கைது செய்தனர். மேலும் இது தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.