கொல்லிமலை;பிப்,4_

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தமிழகத்தில்பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.இங்கு ஏராளமான மலைவாழ் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கொல்லிமலையில் வாழவந்தி நாடு எல்லைக்கு உட்பட்ட செம்மேடு பகுதியில் அரசு மதுபான கடை அருகே
அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறந்து கிடக்கும் ஆண் சடலத்தை மீட்டு கொல்லிமலை வாழவந்தி நாடு காவல் துறையினர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த ஆண் சடலம் யார் என்று காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் வாழவந்தி நாடு காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது 9498101027.
8524901027.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *