குவாரிகளால் நடந்தை கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள நடந்து ஊராட்சி நடந்த கிராமசபா கூட்டத்தில் குவாரிகள் குறித்த கேள்விகளால் பரபரப்பு ஏற்பட்டு கிராமசப கூட்டம் புறக்கணிக்கப்பட்டது.
பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட நடந்தை ஊராட்சியில் நேற்று கிராமசபா கூட்டம் நடைபெற்றது. இதில் குவாரிகளினால் ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் குவாரிகளின் அதிர்வெடிகள் மற்றும் குவாரியிலிருந்து செல்லும் பாரம் தாங்கிய லாரிகள் போன்றவை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் குடிநீர் பிரச்சினை குறித்தும் மற்ற பிரச்சனை குறித்தும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பீடிஓ கலந்து கொண்டு மக்களின் சமரசபேச்சு நடத்தினர். இருப்பினும் மக்கள் சமரச பேச்சுவார்த்தை கட்டுப்படாமல் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்து வெளியேறினர். இறுதியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களை சமாதப்படுத்தினர். இருப்பினும் மக்கள் கிராமசபாவிற்கு குவாரி தொடர்புடைய அதிகாரிகள் வரவேண்டும் எனக்கூறி புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.