இராசிபுரம்;ஏப்,19-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.அதனை தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் கோ.விஜயகுமாரி தலைமையில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.எம் சரவணன் முன்னிலையில்நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் கே பி இராமசாமி Ex MLA அவர்கள் மாணவர்களுக்கு பொன்னாடை போற்றி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்…

8 -ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு (NMMS) நடைபெற்றது…

இத்தேர்வில் இப்பள்ளியைச் சேர்ந்த 11 பேர் தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் 6695 பேர் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்பள்ளியை சேர்ந்த 1 மாணவர் J.P.கிருத்திக் தேர்ச்சி பெற்றது இப்பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

தேர்ச்சி பெற்ற இந்த +2 படிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகையாக கிடைக்கும்…

தேர்ச்சி பெற்ற J.P.கிருத்திக்கு தலைமையாசிரியர் ஆசிரியர் சிவகுமரன் (வரலாறு) மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் கே பி இராமசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாராட்டுகளை தெரிவித்தனர்… மேலும் இந்த நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக துணை செயலாளர் எம் எஸ் அருள், ஆகியோர் உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில் மற்றும் முருகன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *