இராசிபுரம்; மே,1-
இன்று மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது
தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து பகுதியில் உரம்பில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் பிஜேபி சார்பில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக கேள்வி எழுப்ப பட்டது.அதற்கு மங்களபுரம் பஞ்சாயத்து தலைவர் பதில் அளிக்கும் பொழுது பிஜேபி கட்சி நிர்வாகிகள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் மங்களபுரம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள பொதுமக்கள் புகாருக்கும் பஞ்சாயத்து தலைவர் பதில் அளிக்கும் பொழுது வாக்குவாதம் ஏற்பட்டது.எனவே கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கும் பஞ்சாயத்து தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் பிஜேபி சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஏ.கே பாஸ்கர், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் கே.செல்வகுமார், ஒன்றிய பொது செயலாளர் எம்.பிரகாஷ் , சிந்தனையாளர் பிரிவுஒன்றிய தலைவர் ஆறுமுகம்,முன்னாள் ராணுவபிரிவு ஒன்றிய தலைவர் பலராமன், கட்சி நிர்வாகிகள் பச்சமுத்து,ஜோதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2023/05/IMG_20230501_113407.jpg)