நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து நாமக்கல் உட்கோட்டத்திற்கு‌ உட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பரமத்தி வேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப் பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம், பராமரிப்பு சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பரமத்தியில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் பாண்டமங்கலம் முதல் வெங்கரை வரை செல்லும் சாலையில் 1.2 கிலோமீட்டர் தொலைவிற்கு மேம்பாடு செய்யப்பட்ட பணியையும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நாமக்கல் உட்கோட்டத்திற்கு‌ உட்பட்ட பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நாமக்கல் கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி கோட்ட பொறியாளர் மாணிக்கம் மற்றும் உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், சாலை ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *