நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக த.ராமன் அவர்கள் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தமிழகம் முழுவதும் 110 மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், சொந்த மாவட்டம் அல்லாது அருகில் உள்ள மற்றும் பிற மாவட்டங்களுக்கு பலா் இடமாறுதல் பெற்றனா். அதன்படி, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றிய பாலசுப்பிரமணியம், சங்ககிரி கல்வி மாவட்டத்துக்கு மாறுதலானாா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலா் த.ராமன், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியிட மாறுதல் பெற்றாா். இவா் திங்கள்கிழமை நாமக்கல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். மாவட்ட கல்வி அலுவலா் த.ராமன், சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *