இராசிபுரம்; மார்ச்,1-

இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் பிறந்த நாள் விழாவை நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் அவர்கள் அறிவுறுத்தல் படியும் . மாண்புமிகு தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் ஆலோசனை படியும் , நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் கே.பி ராமசாமி (எக்ஸ்.எம்.எல்.ஏ) அவர்களின் வழிகாட்டுதலின் படி. மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றிய கழக துணை செயலாளர் எம்.எஸ் அருள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இதில்
மங்களபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கெளசல்யா முருகப்பன், ஒன்றிய அவை தலைவர் கருப்பண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.எம்.சரவணன், மருத்துவர் பாண்டியன்,இதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள் சேகர்,,கே.ஆர் சுந்தரம்,ஜி.திருப்பதி,ஏ.கருமலை, ஜானகி ராமன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.அறிவழகன், மங்களபுரம் இளைஞர் அணி கோபி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதனை அடுத்து கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தளபதியாரின் பிறந்த நாள் விழாவை வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது . இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 100 கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *