ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய புதிய கட்டிடம் ரூ.66 லட்சம் செலவிலும், சத்தியமங்கலத்தில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய புதிய கட்டிடம் ரூ.63 லட்சம் செலவிலும், பெருந்துறையில் போலீசாருக்கான 32 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.5 கோடியே 20 லட்சம் செலவிலும் கட்டப்பட்டு உள்ளது.

இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *