14 மே 1796
பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.
எட்வார்ட் ஜென்னர் தான் கண்டுபிடித்த பெரியம்மை தடுப்பூசியை பரிசோதிக்க ஜேம்ஸ் பிலிப்ஸ் என்ற 7 வயது சிறுவனை தேர்ந்தெடுத்தார்.
மே 14 ம் நாள் அந்த சிறுவனுக்கு பெரியம்மை தடுப்பூசியை செலுத்தினார்.
அவ்வாறு செலுத்திய முதல் சில நாளில் காய்ச்சல், தலைவலி, பசியின்மை போன்ற சில பிரச்சினைகள் அந்த சிறுவனுக்கு ஏற்பட்டன. என்றாலும் ஏழாம் நாள் அந்த சிறுவன் மிகவும் நலமடைந்தான்.
அதன் பிறகு எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய தடுப்பூசி மருந்தில் சிற்சில மாற்றங்கள் செய்து அதே சிறுவனுக்கு மீண்டும் மீண்டும் செலுத்தினார்.
அதன் பின்னரே முழுமையான வெற்றியடைந்த தடுப்பூசியை உலகுக்கு நல்கினார்.
![](https://vidiyalainokki.com/wp-content/uploads/2024/05/img-20240514-wa00025740053806877237190-300x225.jpg)